முதுகுளத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து ஒலி பெருக்கி நிறுவன உரிமையாளர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காமாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் ராமர் (45). இவர் விழாக்களுக்கு ஒலி பெருக்கி அமைத்துக் கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். அதே ஊரில் ஒரு திருமண விழாவிற்காக, செவ்வாய்க்கிழமை இரவு மரத்தில் ஒலி பெருக்கி அமைக்கும் போது எதிர்பாராதவிதமாக ராமர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது உடலை கைப்பற்றிய போலீஸார் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.