திருவாடானை மேற்குத் தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாடானை மேற்குத் தெருவில் உள்ள இக்கோயில் திருவிழா கடந்த 4ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அன்றிலிருந்து தினமும் இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மயில் காவடி, பறவைக் காவடி, பன்னீர் காவடி மற்றும் பால்குடம் ஏந்தி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.