அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!
/

ஆர்.எஸ். மங்கலத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்

விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் மத்திய அரசின் திட்டத்தில் பயனாளிகளை சேர்க்க ஆர்.எஸ்.மங்கலம்

Updated On :25 பிப்ரவரி 2019, 7:26 am IST

விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் மத்திய அரசின் திட்டத்தில் பயனாளிகளை சேர்க்க ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வேளாண் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களில்  திங்கள்கிழமை (பிப்.25) முதல் 3  நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 
  இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் தமீம்ராஜா கூறியது:  ஆர்.எஸ். மங்கலம் வட்டார வேளாண் அலுவலகம் மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் 3 நாள்கள் (பிப்.25, 26 மற்றும் 27) நடைபெறும் சிறப்பு முகாமில் விவசாயிகள் தங்களது நிலத்துக்கான பட்டா ஆவணம் 10 (1),  ஆதார் அட்டை, வங்கி கணக்குப் புத்தகத்தின் முன் பக்க நகலுடன் நேரில் வரலாம். மேலும் விவரங்களுக்கு ஆர்.எஸ். மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை 04561- 241454 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம். மேலும் பிரதான் மந்திரி சம்மான் நிதி திட்டத்தின் கீழ்  தகுதியுடைய விவசாயிகள் பயன்பெறும் விதமாக, ஆர். எஸ். மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து வேலை நாள்களிலும் சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.