திருவாடானை அருகே தொண்டியில் அரசு கேபிள் ஆபரேட்டர்கள் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் சங்கத் தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். திருவாடானை தாலுகா செயலாளர் சிவராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
இதில் தமிழக அரசு கேபிள் கட்டணத்தை குறைத்துள்ளதற்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, ஆணய தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும்,கேபிள் ஆபரேட்டர்களுக்கு புதிய இணைப்பு செட்டாப்பாக்ஸ் மற்றும் உதிரி பாகங்கள் தங்கு தடையின்றி கிடைக்க வலியுருத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.