ராமேசுவரத்தில் சர்வதேச அரிமா சங்க கிளை தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் ஜெ.கே.ஆர்.முருகன் தலைமை வகித்தார். பிரகாஷ் முன்னிலை வகித்தார். ராமேசுவரத்தில் அரிமா சங்கக் கிளை துவக்கி வைக்கப்பட்டது. இதன் தலைவராக அலெக்ஸ் பர்னாண்டோ, செயலாளராக பிரகாஷ், பொருளாளராக குமரன் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, சி.எஸ்.ஐ. பள்ளிக்கு அரிசி மூட்டைகள் மற்றும் தனுஷ்கோடி சத்திரம் பகுதியில் உள் பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. முன்னதாக சக்திவேல் வரவேற்றார்.