ராமநாதபுரத்தில் ஜவுளிக்கடை ஊழியரைத் தாக்கியதாக 7 பேர் மீது வழக்குப்பதிந்த போலீஸார், அதில் இளைஞர் ஒருவரை மட்டும் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
ராமநாதபுரம் நகர் புலிக்காரத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (20). இவர் தனியார் ஜவுளிக்கடையில் பணியாற்றி வந்தார். திங்கள்கிழமை இரவு அவர் பேராவூர் பகுதியில் பொந்தம்புளி மரத் தெருவிற்குச் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த கும்பல், அடிக்கடி ஏன் இப்பகுதி வழியாக வருகிறாய் எனக்கேட்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மணிகண்டன் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுதொடர்பாக புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸார் 7 பேர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் ராமநாதபுரம் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த அஜீத் (20) என்பவரை திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.