திருவாடானை மகாலிங்க மூர்த்தி ஆடி உற்சவ விழா: மதுக்குட ஊர்வலம்

திருவாடானையில் உள்ள  மகாலிங்க மூர்த்தி ஆடி உற்சவ  விழாவையொட்டி  மதுக்குட ஊர்வலம் நடைபெற்றது.

திருவாடானையில் உள்ள  மகாலிங்க மூர்த்தி ஆடி உற்சவ  விழாவையொட்டி  மதுக்குட ஊர்வலம் நடைபெற்றது.
திருவாடானையில் ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள மகாலிங்க மூர்த்தி கோயிலில் ஆடி உற்சவ விழா  கடந்த புதன்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.  
கோயிலில் பரிவார தெய்வமான மல்லிகுடி ஆத்தாள் என்ற சுவாமிக்கு  பக்தர்கள் மதுக் குடம் தலையில் ஏந்தி வீதி உலா வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.  பக்தர்கள் கொண்டு வந்த பாலினால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 
பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழஇ திருவிழா வரும் வெள்ளிக்கிழமை (ஆக.16)  நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com