தொண்டியில் இறந்து கரை ஒதுங்கிய  500 கிலோ எடையுள்ள டால்பின் 

ராமநாதபுரம் மாவட்டம்  தொண்டி கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய 500 கிலோ எடையுள்ள டால்பின் மீனை

ராமநாதபுரம் மாவட்டம்  தொண்டி கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய 500 கிலோ எடையுள்ள டால்பின் மீனை வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு புதைத்தனர்.
திருவாடானை அருகே தொண்டியில்  ஜெட்டி பாலம் அருகே சுமார் 500 கிலோ எடையுள்ள டால்பின் மீன் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது. 
 இதுகுறித்து அப்பகுதி  மீனவர்கள்  கடலோர பாதுகாப்பு படை மற்றும் வனத்துறையினருக்குத்  தகவல் தெரிவித்தனர்.  தகவலறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கரை ஒதுங்கிய டால்பின் மீனை மீட்டு பின்னர் உடல் கூறு ஆய்வு செய்தனர். பின்னர் கடற்கரையில் ஆழமான குழி தோண்டி புதைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com