இருசக்கர வாகனம் பாலத்தில் மோதி கல்லூரி மாணவர் பலி

ராமநாதபுரம் அருகே இரு சக்கர வாகனம் பாலத்தின் சுவரில் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.

ராமநாதபுரம் அருகே இரு சக்கர வாகனம் பாலத்தின் சுவரில் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
கமுதி காளியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி கணேசன். இவரது மகன் ராஜகுட்டி (19). இவர் ராமநாதபுரம் சேதுபதி அரசினர் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு  படித்துவந்தார். இந்நிலையில் மாலையில்,  சாலைத்தெருவில் உள்ள தனியார் பேக்கரியிலும் வேலை பார்த்து வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு பணி முடித்து இருசக்கர வாகனத்தில் சென்றார். 
அவருடன் ராமநாதபுரம் கே.கே.நகர் பிரகாஷ் (18) சென்றுள்ளார். அவர்கள் அச்சுந்தன்வயல் சோதனைச் சாவடி அருகே சென்றபோது நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் அங்கிருந்த பாலத்தின் சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த ராஜகுட்டி, பிரகாஷ் ஆகியோரை  போலீஸார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே  ராசுகுட்டி உயிரிழந்துவிட்டதாகக் கூறினர்.  மேலும், காயமடைந்த பிரகாஷ் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து ராமநாதபுரம்  நகரப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com