கமுதி பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கமுதி உபமின் நிலைய உதவி செயற்பொறியாளர் டி.சந்திரன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கமுதி கோட்டைமேட்டில் உள்ள உபமின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.16) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கமுதி, அபிராமம், பார்த்திபனூர், முதுகுளத்தூர், செங்கப்படை, கீழராமநதி, மண்டலமாணிக்கம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அதன் சுற்றியுள்ள சுற்று வட்டார பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.