ராமநாதபுரத்தில் பரவலாக மழை

ராமநாதபுரத்தில் புதன்கிழமை மாலையில் திடீரென பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

ராமநாதபுரத்தில் புதன்கிழமை மாலையில் திடீரென பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
ராமநாதபுரம் நகரில் கடந்த பல மாதங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. கடந்த 4 ஆண்டுகளாக ராமநாதபுரம் நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் பருவமழை பொய்த்துப் போனதால் கடும் வறட்சியும் நிலவி வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமிருந்த நிலையில், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென மிதமான மழையும் பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com