கமுதியில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
கமுதி-சாயல்குடி சாலையில் காமராஜர் சிலை அருகே நாம் தமிழர் கட்சியின் முதுகுளத்தூர் தொகுதி தலைமை அலுவலகத்தை மாநில பொறுப்பாளர் வெற்றிக்குமரன் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். பின்னர் வில்லனேந்தல், பம்மனேந்தல், பெருமாள் குடும்பன்பட்டி, திருச்சிலுவையாபுரம் ஆகிய கிராமங்களில் தமிழ்தேசிய பெரும் முன்னோர்களுக்கு நினைவு கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மண்டல, மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.