ராமநாதபுரத்தில் ஆக.28 இல் எரிவாயு விநியோக குறைதீர் கூட்டம்

ராமநாதபுரத்தில் சமையல் எரிவாயு விநியோக குறைதீர்க்கும் கூட்டம் வரும் 28 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் சமையல் எரிவாயு விநியோக குறைதீர்க்கும் கூட்டம் வரும் 28 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், ராமேசுவரம், திருவாடானை, கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு  உள்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிவாயு முகவர்களுடன் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படவுள்ளது. 
குறைதீர்க்கும் கூட்டமானது வரும் 28 ஆம் தேதி  மாலை 5 மணிக்கு  ராமநாதபுரம்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடத்தப்படவுள்ளது.  கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com