திருவாடானை அருகே ஆர்.எஸ்.மங்கலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்கள். இங்கு ஆண்டுதோறும் ஆடி, ஆவணி மாதங்களில் பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த ஆகஸ்டு 2 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெள்ளிக்கிழமை நள்ளிரவு பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பால் காவடி, மயில் காவடி, வேல் காவடி எடுத்து வந்து பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து இரவு கலை நிகழச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செவ்வாய்க்கிழமை இரவு பட்டாபிஷேகம் விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆர்எஸ் மங்கலம் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.