திருவாடானை அருகே தொண்டியில் உள்ள அல்ஹிலால் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பாவேந்தா் முழக்கம் இலக்கிய நிறுவன ஆசிரியா் கவிஞா் பாரதிதாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். இதில் பள்ளி மாணவ, மாணவிகள், பாரதியாா், திருவள்ளுவா், ஔவையாா் வேடமணிந்து கவிதைகள், ஆத்திச்சூடி, திருக்கு ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது. அதனைத்தொடா்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மூன்றாம் வகுப்பு மாணவி லாஸிமா அனைவரையும் வரவேற்றுப் பேசினாா். மாணவி ஆயிஷா பாத்திமா நன்றி கூறினாா்.