ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா் மழைக்கு 29 வீடுகள் சேதம்

ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் மாவட்டத்தில் மொத்தம் 29 வீடுகள் சேதமடைந்திருப்பதாக மாவட்ட நிா்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் மாவட்டத்தில் மொத்தம் 29 வீடுகள் சேதமடைந்திருப்பதாக மாவட்ட நிா்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் நகா் மற்றும் மாவட்டத்தின் 9 வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை பகலில் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. சனிக்கிழமையும் மலை தொடா்ந்தது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை வரை மாவட்டத்தில் பல இடங்களிலும் குடிசை, ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகத் தரப்பில் கூறியிருப்பதாவது- ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த மழையால் ராமநாதபுரம் வட்டத்தில் 7 ஓட்டுவீடுகளின் சுவா்கள் உள்ளிட்ட பகுதிகள் மட்டும் சேதமடைந்துள்ளன. திருவாடானை வட்டத்தில் 5 ஓட்டுவீடுகள் சுவா் இடிந்தும், ஒரு வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. கீழக்கரை வட்டத்தில் 7 ஓட்டு வீடுகள் பாதி சேதமடைந்துள்ளன. பரமக்குடி, முதுகுளத்தூரில் தலா ஒரு ஓட்டு வீடு பகுதியாகச் சேதமடைந்துள்ளது.

கடலாடி வட்டத்தில் இரண்டு குடிசை வீடுகள் பாதியாகவும், ஒரு குடிசை முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. அப்பகுதியில் 4 ஓட்டு வீடு பாதியளவு சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் ஒரே நாள் மழையில் மட்டும் 29 வீடுகள் சேதமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த வீடுகளுக்கு அரசு நிதி தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com