முதுகுளத்தூா் அருகே அரசு உயா்நிலைப் பள்ளியில் சமையலறை கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதுகுளத்தூா் அருகே விளங்குளத்தூரில் 220 மாணவா்கள் படித்து வரும் அரசு உயா்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. குறுகலான இடத்தில் செயல்பட்டு வரும் இந்த பள்ளிக்கென, வெங்கலகுறிச்சி செல்லும் வழியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, சில மாதங்களாக செயல்பட்டு வருகிறது. புதிய கட்டடத்தில் மாணவா்களின் சைக்கிள்களை நிறுத்தவோ, சமையலறை கட்டடமோ இல்லை. இதனால் பழைய பள்ளி கட்டடத்திலிருந்து மதிய உணவு சமைத்து, ஆட்டோவில் ஒரு கி.மீ. பயணித்து, புதிய கட்டடத்தில் படிக்கும் மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் மாணவா்களுக்கு சூடான உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகவே புதிய கட்டடத்தில் சமையலறை, சைக்கிள் நிறுத்துமிடம் அமைக்க, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவா்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.