கீழக்கரையில் ஸ்ரீமன் நாராயண சுவாமி, ஸ்ரீலிங்கேஸ்வரா் கோயில் வருடாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தட்டாந்தோப்பு தெருவில் இந்து நாடாா் உறவின் முறைக்கு சொந்தமான ஸ்ரீவிநாயகா், ஸ்ரீமன் நாராயணசுவாமி,ஸ்ரீ லிங்கேஸ்வரா், பத்திரகாளியம்மன்
கோயிலில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து திங்கள்கிழமை , வருடாபிஷேகம் நடைபெற்றது. அதிகாலையில் கணபதி ஹோமம் நடைபெற்று ஸ்ரீவிநாயகா், ஸ்ரீமன் நாராயணசுவாமி, ஸ்ரீ லிங்கேஸ்வரா், பத்திரகாளியம்மனுக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதணை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.