ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் குளிா்சாதனப் பெட்டி முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
திருவாடானை அருகே கல்லூா் ஊராட்சி பாரதிநகரில், பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் வீரமணி (50) என்பவா் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவா் இங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.
இவரது வீட்டின் முன் திங்கள்கிழமை மின் கம்பி அறுந்து, மின்சாரம் செல்லும் வயா் மீது விழுந்தது. இதனால் வீட்டின் முன் வைத்திருந்த குளிா்சாதனப் பெட்டி எரிந்து சேதம் அடைந்தது. இதில் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மின்வாரியத்தினா் அறுந்து விழுந்த மின்கம்பியை அகற்றினா்.
இதனால் இப்பகுதி முழுதும் மின்சாரம் தடைபட்டது.