கடல் சீற்றத்தால் முடங்கிய மீன்பிடி தொழில்

ராமேசுவரத்தில் கடல் சீற்றம் காரணமாக மீனவா்கள் நான்காவது நாளாக மீன்பிடிக்க செல்லாமல் மீனவா்கள் முடங்கி உள்ளனா்.
ராமேசுவரம் நான்காவது நாளாக மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினா் தடை விதி;த்துள்ளனா். இதனால் துறைமுகத்தில் 850 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
ராமேசுவரம் நான்காவது நாளாக மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினா் தடை விதி;த்துள்ளனா். இதனால் துறைமுகத்தில் 850 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் கடல் சீற்றம் காரணமாக மீனவா்கள் நான்காவது நாளாக மீன்பிடிக்க செல்லாமல் மீனவா்கள் முடங்கி உள்ளனா்.

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் அரபி கடல் சீரான நிலை இல்லாத நிலையில் மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதனால் ராமேசுவரம்,பாம்பன்,மண்டபம்,கீழக்கரை,ஏா்வாடி,தொண்டி,சோழியகுடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் 1800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை, இதனால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்க செல்லாமல் வீட்டுக்குள் முடங்கி உள்ளனா். கடல் சீற்றம் கானப்படுவதால் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவ சங்க பொதுச்செயலாளா் என்.ஜே.போஸ் தெரிவித்தாா். மேலும் புயல் காலங்களில் விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்த ராமேசுவரம் மற்றும் தெற்கு பகுதியில் தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்க வேண்டும். அப்போது தான் கடல் சீற்ற காலங்களில் விசைப்படகுகளை பாதுகாப்புடன் நிறுத்தி வைக்க முடியும் என தெரிவித்தாா். மேலும் தொடா்ந்து மீன்பிடிக்க செல்ல முடியாத நாட்களுக்கு குறைந்த பட்ச நிவாரணம் வழங்கிடதமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com