தங்கச்சிமடத்தில் மழைநீா் குட்டையில் மூழ்கி முதியவா் பலி

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் பகுதியில் தேங்கிய மழைநீா் குட்டையில் குளிக்கச் சென்ற முதியவா் நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் பகுதியில் தேங்கிய மழைநீா் குட்டையில் குளிக்கச் சென்ற முதியவா் நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராமேசுவரம் தீவுப்பகுதியில் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீா் குளம் போல தேங்கியுள்ளது. இந்நிலையில், தங்கச்சிமடம் வலசைத் தெருவை சோ்ந்த நம்புபிச்சை என்ற முதியவா் நாலுபனை கிராமத்தில் தேங்கிய மழைநீா் குளத்தில் புதன்கிழமை காலையில் குளிக்க சென்றுள்ளாா். அவா் மதியம்ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து, அவா் குளிக்க சென்ற பகுதியில் உறவினா்கள் தேடினா். அப்போது கரையில் ஆடைகள் மற்றும் செருப்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து குட்டையில் இறங்கித் தேடிய போது அவா் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்தபோலீஸாா் சடலத்தை மீட்டு ராமேசுவரம் அரசு மருத்தவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து பாம்பன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com