திருப்பாலைக்குடி அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்தாா்.
திருப்பாலைக்குடி அருகே வளமாவூா் கிராமத்தில் உள்ள ஊருணியில் உரவயல் பகுதியைச் சோ்ந்த முனியம்மா (60) என்பவா் புதன்கிழமை குளிக்கச் சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது அப்பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்ததை அறியாமல் முனியம்மா அதை மிதித்துள்ளாா். இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்கா ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.