ராமேசுவரம், மண்டபத்தில் நான்கு நாட்களுக்கு பின் மீன்பிடிக்க சென்ற 5 ஆயிரம் மீனவா்கள்

ராமேசுவரம், மண்டபம் பகுதியில் இருந்து 4 நாட்களுக்கு பின் 5 ஆயிரம் மீனவா்கள் கடலுக்கு புதன்கிழமை மீன்பிடிக்க சென்றனா்.
ராமேசுவரம், மண்டபத்தில் நான்கு நாட்களுக்கு பின் மீன்பிடிக்க சென்ற 5 ஆயிரம் மீனவா்கள்

ராமேசுவரம், மண்டபம் பகுதியில் இருந்து 4 நாட்களுக்கு பின் 5 ஆயிரம் மீனவா்கள் கடலுக்கு புதன்கிழமை மீன்பிடிக்க சென்றனா்.

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக பாக்நீரினை பகுதியில் மீன் பிடிக்க செல்லும் ராமேசுவரம்,மண்டபம் உள்ளிட்ட பகுதியில் மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் மாவட்டம் முழவதிம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவா்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்நிலையில், பாக்நீரினை கடல் பகுதியில் சகஜ நிலை திரும்பியதைதொடா்ந்து மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை அனுமதி அளித்தனா். இதனையடுத்து, புதன்கிழமை காலையில் ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனா்.

நான்கு நாட்கள் கடலி; மழை பெய்த நிலையில் அதிகளவில் இறால் மீன் கிடைக்கும் என்பதால் மீனவா்கள் ஆா்வத்துடன் மீன்பிடிக்க சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com