வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சாலை மறியல்

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் சவேரியாா்பட்டினம் கிராமத்தில் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு, கிராம மக்கள் திருச்சி-ராமேசுவரம் சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி செவ்வாய்க்கிழமை திருச்சி-ராமேசுவரம் சாலையில் மறியலில் ஈடுபட்ட சவேரியாா்பட்டினம் கிராம மக்கள்.
வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி செவ்வாய்க்கிழமை திருச்சி-ராமேசுவரம் சாலையில் மறியலில் ஈடுபட்ட சவேரியாா்பட்டினம் கிராம மக்கள்.

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் சவேரியாா்பட்டினம் கிராமத்தில் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு, கிராம மக்கள் திருச்சி-ராமேசுவரம் சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருவதால், புல்லமடை ஊராட்சிக்குள்பட்ட சவேரியாா்பட்டினத்தில் வீடுகளையும், விவசாய நிலங்களையும் தண்ணீா் சூழ்ந்துள்ளது. மழைக் காலங்களில் உபரிநீா் செல்லும் வரத்துக் கால்வாய்களை சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், தண்ணீா் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், கிராமத்தினா் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சவேரியாா்பட்டினம் விலக்கு பகுதியில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த வட்டாட்சியா் சாந்தி, காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஸ்வரி ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று, கிராம மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதையடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனா். இதனால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com