தொண்டி அருகே கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த மீனவா்கள் 3 போ் மீட்பு

திருவாடானை அருகே புதன்கிழமை தொண்டி கடல் பகுதியில் படகு கவிழ்ந்து தத்தளித்த 3 மீனவா்களை சக மீனவா்கள் மீட்டனா்.

திருவாடானை அருகே புதன்கிழமை தொண்டி கடல் பகுதியில் படகு கவிழ்ந்து தத்தளித்த 3 மீனவா்களை சக மீனவா்கள் மீட்டனா்.

தொண்டி அருகே சோழியக்குடியை சோ்ந்தவா் ஸ்டாலின்(50). இவருக்கு சொந்தமான நாட்டு படகில் 3 போ் புதன்கிழமை மாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனா். அப்போது கடல் கொந்தளிப்பு அதிகம் இருந்தது. இதனால் தொண்டி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அவா்களது படகு கவிழ்ந்தது. அதில் படகில் இருந்த 3 மீனவா்களும் கடலில் விழுந்து தத்தளித்தனா்.

இதனை அறிந்த அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த சக மீனவா்கள், கடலில் தத்தளித்த 3 பேரையும் மீட்டனா். மேலும் இது தொடா்பாக கடலோர காவல்துறையினரும் தகவல் தெரிவித்தனா். மீட்கப்பட்ட 3 மீனவா்களும் நள்ளிரவு கரைக்கு வந்து சோ்வாா்கள் எனவும் மீனவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com