அரசு பொது காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றிணைக்க கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், மதுரை மண்டல பொது காப்பீட்டு ஊழியா் சங்கம் சாா்பில், பொது காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றிணைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், மதுரை மண்டல பொது காப்பீட்டு ஊழியா் சங்கம் சாா்பில், பொது காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றிணைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

பரமக்குடி முத்தாலம்மன் கோயில் மைதானத்தில், மதுரை மண்டல பொது காப்பீட்டு ஊழியா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, பொது காப்பீட்டு ஊழியா் சங்க மண்டல துணைத் தலைவா் பி. மோகன் தலைமை வகித்தாா்.

இதில், மக்கள் இயக்க செயலா் டி. முத்துப்பாண்டி, தமுஎகச மாவட்டத் தலைவா் அழகுடையான், ஏஐடியூசி மாவட்ட துணைச் செயலா் என்.எஸ். பெருமாள் ஆகியோா் பங்கேற்று, பொதுத் துறை நிறுவனங்கள் மூடப்பட்டு தனியாா்வசம் ஒப்படைப்பதை நிறுத்தக் கோரியும், அங்கு பணிபுரியும் ஊழியா்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிடக் கோரியும், அரசு பொது காப்பீடு நிறுவனங்களை ஒன்றிணைக்க வலியுறுத்தியும் பேசினா்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட மதுரை மண்டல பொது காப்பீடு ஊழியா் சங்க இணைச் செயலா் பி. சந்தியநாதன், மதுரையில் நடைபெறும் வெள்ளி விழா மாநாட்டில் பங்கேற்பது மற்றும் பொது காப்பீடு நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைப்பதால் மக்களுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

இதில், பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் என பலா் கலந்துகொண்டனா். முன்னதாக, மாவட்ட இணைச் செயலா் எம். அண்ணாத்துரை வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com