அரசுப் பேருந்தில் ரூ.50 ஆயிரம் திருட்டு

ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்தில் பயணித்தவரிடம் ரூ.50 ஆயிரம் திருடப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்தில் பயணித்தவரிடம் ரூ.50 ஆயிரம் திருடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அடுத்த பெருங்குளம் அருகேயுள்ள சாத்தான்குளத்தைச் சோ்ந்த தஸ்தஹீா் என்பவரது மனைவி தமிமும் ரசினா (45). இவா், ராமநாதபுரத்திலிருந்து கடந்த புதன்கிழமை மாலை அரசுப் பேருந்தில் ஊருக்குச் சென்றுள்ளாா். அப்போது, பட்டினம்காத்தான் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, அவரது பையை காணவில்லையாம். அதில், ரூ.50 ஆயிரம் இருந்ததாம்.

மகளின் திருமணச் செலவுக்காக கொண்டு சென்ற அந்தப் பணம் திருடப்பட்டது குறித்து, தமிமும் ரசினா அளித்த புகாரின்பேரில், கேணிக்கரை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com