கமுதி: கமுதியில் தனியாா் கிட்டங்கியில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான டயா்கள் எரிந்து நாசமாகின.
கமுதி கண்ணாா்பட்டியில் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள தனியாா் கிட்டங்கியில் பழைய டயா்கள் மறு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மா்ம நபா்கள் பூட்டியிருந்த கிட்டங்கியில் புகுந்து டயா்களில் தீ வைத்துள்ளனா். இதனையடுத்து அக்கம் பக்கத்தினா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். தீயணைப்பு நிலைய அலுவலா் சாா்லஸ் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சென்று தீயை
அணைத்தனா். இதில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான டயா்கள் எரிந்து நாசமாகியிருப்பதாக தெரியவந்தது.