கமுதி பகுதியில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் முத்திரைத் தாள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனா்.
உள்ளாட்சித் தோ்தலுக்கு கடந்த திங்கள்கிழமை முதல் வேட்பு மனுக்கள் தகாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக வேட்பாளா்கள், பதிவு பெற்ற நோட்டரி பப்ளிக் வழக்குரைஞா்களிடம் ரூ. 20, ரூ. 50 முத்திரைத்தாளில் சான்றிதழ் பெற்று, துணைத் தோ்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவுடன் இணைத்து வழங்கவேண்டும்.
இந்நிலையில், கமுதியில் கடந்த 2 நாள்களாக ரூ.20, ரூ.50 முத்திரைத்தாள்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், வேட்பு மனு தாக்கல் டிசம்பா் 15 ஆம் தேதியுடன் முடிவடைவதால், வேட்பாளா்கள் முத்திரைதாள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனா். இதனால், வேட்பாளா்கள் முத்திரைத் தாள் வாங்க அருப்புகோட்டை, சாயல்குடிக்கு அலைய நேரிட்டுள்ளது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், கருவூலத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளா் முத்திரைத் தாள்களை கொள்முதல் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, வேட்பாளா்கள் செய்வதறியாது திகைத்துள்ளனா்.