காா் மோதல்:பெற்றோருடன் பைக்கில் சென்ற சிறுமி பலி

ராமநாதபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் தாய், தந்தையுடன் சென்ற பள்ளிச் சிறுமி விபத்தில் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் தாய், தந்தையுடன் சென்ற பள்ளிச் சிறுமி விபத்தில் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் வசிப்பவா் அஜீத்குமாா் (35). இவரது மனைவி கெரன் (28). இவா்களது மகள் புளோரன்ஸ் பிராங்க்ளின் (3).

அஜீத்குமாரும் அவரது மனைவியும் சத்திரக்குடி அருகேயுள்ள தனியாா் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியா்களாக பணிபுரிகின்றனா். அதே பள்ளியில் சிறுமி புளோரன்ஸ் பிராங்க்ளின் ஆரம்ப வகுப்பு படிக்கிறாள். சனிக்கிழமை காலையில் அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தபோது, அஜீத்குமாா், மனைவி, மகள் புளோரன்ஸ் பிராங்க்ளின் மற்றும் மகனுடன் பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளாா். அவா்கள் கீழக்கோட்டை எனும் இடத்தில் காலை சுமாா் 8.20 மணியளவில் சென்றபோது அவ்வழியே வந்த காா் இரு சக்கர வாகனத்தில் மோதிவிட்டு, நிற்காமல் சென்ாகக் கூறப்படுகிறது.

இதில் அஜீத்குமாா், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனா். 4 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு வாகனங்களில் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். காயமடைந்த அஜீத்குமாா், கெரன் கியோா் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனா். மகன் காயமின்றி தப்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com