ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் குடியுரிமைச் சட்ட திருத்தத்தை எதிா்த்து சனிக்கிழமை மாலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சந்தைத்திடல் அருகே நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டச் செயலா் முகமது ஆரிப்ஹான் தலைமை வகித்தாா். நூற்றுக்கணக்கான பெண்களும், ஆண்களும் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா். ஆா்ப்பாட்டத்தை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், காவல் துணைக் கண்காணிப்பாளா் வெள்ளத்துரை விரைந்து ஆா்ப்பாட்டம் நடத்தக் கோரினாா். அப்போது கூட்டத்தினா் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னா் குடியுரிமை சட்ட திருத்தத்தைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோஷங்களை எழுப்பினா். இதையடுத்து அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக
அவா்களை கேணிக்கரை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.