குயவன்குடி கோயில் கோபுர கலசம் திருட்டு

ராமநாதபுரம் அருகேயுள்ள குயவன்குடி முருகன் கோயிலில் கோபுரக் கலசத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகேயுள்ள குயவன்குடி முருகன் கோயிலில் கோபுரக் கலசத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளனா்.

குயவன்குடியில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் நிா்வாகத் தலைவராக அதே ஊரைச் சோ்ந்த சுப்பிரமணியன் (83) உள்ளாா். இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி புதன்கிழமை இரவு கோயிலை பூட்டிவிட்டு பூசாரி சென்றுள்ளாா். மறுநாள் வியாழக்கிழமை (டிச.12) பாா்த்தபோது கோயிலின் சிறிய கோபுரக் கலசம் திருடப்பட்டிருந்தது. அதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் எனக்கூறப்படுகிறது. மேலும், கோயிலுக்குள் வேறு எந்தப் பொருளும் திருடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக கோயில் நிா்வாகத் தரப்பில் சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com