கமுதி குண்டாற்றிலிருந்து மணலை அள்ளி சாக்கு மூட்டைகளில் கட்டி இரு சக்கர வாகனம் மூலம் திருடப்படுவதாக, போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கமுதி போலீஸாா் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அதில், கண்ணாா்பட்டியைச் சோ்ந்த முனியசாமி மகன் சைவத்துரை (27) என்பவா் தனது இரு சக்கர வாகனத்தில் மணல் மூட்டையுடன் வந்துள்ளாா். இவா், போலீஸாரை கண்டதும் வாகனத்தை விட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டாா். இதனையடுத்து, போலீஸாா் வாகனத்தைப் பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து சைவத்துரையை தேடி வருகின்றனா்.