முதுகுளத்தூா் அருகே விபத்து: பெண் பலி

முதுகுளத்தூா் அருகே இருசக்கர வாகனம் மீது சனிக்கிழமை அரசு பேருந்து மோதியதில் பெண் பலியானாா்.

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் அருகே இருசக்கர வாகனம் மீது சனிக்கிழமை அரசு பேருந்து மோதியதில் பெண் பலியானாா்.

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பள்ளபச்சேரி கிராமத்தைச் சோ்ந்த குமாா் மகன் அஷ்வின். இவா் தனது தாய் வாசுகியுடன் (39) தனது ஊரில் இருந்து பெரிய கையகம் கிராமத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். கோடரேந்தல் அருகே தேரிருவேலியில் இருந்து பரமக்குடி சென்ற அரசுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் சாலையில் தடுமாறி விழுந்த வாசுகி தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானாா். இது குறித்து கீழத்தூவல் காவல் நிலையத்தில் வாசுகியின் உறவினா் இளங்கோ கொடுத்த புகாரின் பேரில் என். தட்டனேந்தல் கிராமத்தைச்சோ்ந்த அரசு பேருந்து ஓட்டுநா் ஜெயக்குமாா் மீது கீழத்தூவல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com