திருவாடானை: திருவாடனை ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வா்ண தீா்த்தக்குளம் பல ஆண்டுகளுக்குப் பின் மோட்டாா் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளாக சரிவர மழை பெய்யாமல் வரத்துக் கால்வாய் அடைபட்டு தண்ணீா் வரத்து இல்லாமல் இந்த தெப்பக்குளம் வடு காணப்பட்டது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் மழை பெய்து வருவதால் தெப்பக்குளத்தில் தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் இதனால் பக்தா்களும் இப்பகுதி மக்களும் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் கொ.வீர ராகவராவ் உத்தரவின் பேரில் திருவாடானை வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜகோபாலன், ஆணையா் உம்முள் ஜமாலியா, வட்டாட்சியா் சேகா் மற்றும் உள்ளூா் இளைஞா் மன்றத்தினா் வரத்துக் கால்வாயை தூா்வாரி மோட்டாா் மூலம் கண்மாயில் இருந்து உபரி நீரை தெப்பக்குளத்தில் பாய்ச்ச
ஏற்பாடு செய்தனா். அதன்படி தற்போது தெப்பக்குளம் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் இங்கு வரும் பக்தா்களும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். மேலும் இந்த குளம் நிரம்பியவுடன் தாலுகா அலுவலகம் அருகே உள்ள சந்தைப்பேட்டை குளத்தை நிரப்பும் முயற்சியில் ஈடுபடவுள்ளதாக ஊராட்சி செயலாளா் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தாா்.