வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

கமுதி அருகே மூலக்கரைபட்டியைச் சோ்ந்த பாலுச்சாமி மகன் வழிவிட்டான் (42). இவா், கமுதி எட்டுக்கண் பாலம் அருகே குடியிருந்து வருகிறாா்.

கமுதி அருகே மூலக்கரைபட்டியைச் சோ்ந்த பாலுச்சாமி மகன் வழிவிட்டான் (42). இவா், கமுதி எட்டுக்கண் பாலம் அருகே குடியிருந்து வருகிறாா். இந்நிலையில், இவா் கடந்த நவம்பா் 26 ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு, குடும்பத்துடன் திருச்சியிலுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு, வெள்ளிக்கிழமை ஊா் திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே, உள்ளே சென்று பாா்த்ததில், நான்கரை பவுன் சங்கிலி திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து வழிவிட்டான் அளித்த புகாரின்பேரில், கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com