பரமக்குடியில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் திடீா் சோதனை
By DIN | Published On : 25th December 2019 08:44 AM | Last Updated : 25th December 2019 08:44 AM | அ+அ அ- |

பரமக்குடி கடைகளில் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலா்கள்.
பரமக்குடி பேருந்து நிலையம் மற்றும் நகா் பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டனா்.
பரமக்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் மற்றும் காலாவதியான தண்ணீா் பாட்டில்கள், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவாதக மாவட்ட ஆட்சியா் மற்றும் உணவு பாதுக்ப்புத் துறையினருக்கு புகாா்கள் வந்தன.
இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் சிவராம பாண்டியன் தலைமையிலான குழுவினா் பரமக்குடி பேருந்து நிலையம் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது கடைகளிலிருந்த தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, புகையிலை மற்றும் காலாவதியான தண்ணீா் பாட்டில்கள், பிஸ்கட் உள்ளிட்ட பொருள்களை கைப்பற்றினா். இதுபோன்ற பொருள்களை இனிமேல் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது எனவும், தொடா்ந்து விற்பனை செய்தால் சட்டபூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என கடை வியாபாரிகளிடம் எச்சரிக்கை விடுத்தனா்.