ராமநாதபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் வாரிய ஊழியர் மத்திய அமைப்பினர் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மின் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் ராமநாதபுரம் மின் பகிர்மான வட்டக்கிளை மற்றும் வழுதூர் எரிவாயு சுழலி உற்பத்தி வட்டக் கிளை சார்பில் மின்வாரிய அலுவலக மேற்பார்வையாளர் அலுவலகம் முன் இத்தர்னா நடந்தது.
இதில் மத்திய அமைப்பின் திட்ட தலைவர் டி.ராமச்சந்திரபாபு தலைமை வகித்தார். பணி ஊதியத்தை குறிப்பிட்ட காலத்தில் வழங்குதல், வேலைப்பளுவை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன. மண்டலச்செயலர் எஸ்.உமாநாத் சிறப்புரையாற்றினார். சிஐடியூ மாவட்டச் செயலர் எம்.சிவாஜி மற்றும் ஆர்.குருவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.