ராமநாதபுரத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிவேக இணைய சேவையின் விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து தொடங்கிய பேரணியை மதுரை பிஎஸ்என்எல் மேலாளர் ராஜம் தொடக்கிவைத்தார். பிஎஸ்என்எல் ஊழியர்கள், தனியார் அமைப்புகள் கலந்து கொண்ட இப்பேரணியில் அதிவேக இணைய சேவை வசதியை விளக்கும் வகையில் பதாகைகளும் எடுத்துவரப்பட்டன.
பேரணியானது சந்தைத் தெரு, அக்ரஹாரம், ராஜவீதி, வண்டிக்காரத் தெரு வழியாக கேணிக்கரை வழிவிடு முருகன் கோயிலை அடைந்தது. பேரணியில் பிஎஸ்என்எல் ராமநாதபுரம் மேலாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.