குரூப் 2 நேர்காணலுக்கு  பிப்.16 இல் இலவச மாதிரித் தேர்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச மாதிரி நேர்காணல்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச மாதிரி நேர்காணல் தேர்வு ராமநாதபுரத்தில் வரும் 16 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
 இது குறித்து சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாதெமி நிறுவனர் து.சுகேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் 113 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படவுள்ளது. இதனை  முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள சுரேஷ் ஐ.எஸ்.எஸ். அகாதெமி சார்பில் வரும் சனிக்கிழமை (பிப்.16) காலை 9 மணிக்கு இலவசமாக மாதிரி நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளது.இத்தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் அனைத்துப் பகுதி போட்டியாளர்களும் கலந்துகொள்ளலாம். தேர்வில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் அகாதெமி சார்பில் இலவசமாக பாடக்குறிப்புகள், நடப்பு நிகழ்வுகள், விரிவான விளக்கங்களுடன் விடைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். 
மாதிரித் தேர்வில் பங்கேற்போர் முன்பதிவு செய்வது அவசியம். அரசு தேர்வுக்கான நுழைவுச்சீட்டு, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டு வரவேண்டும். மாதிரித் தேர்வுக்கு வருவோருக்கு அகாதெமி சார்பில் இலவசமாக விடுதி வசதிகளும் செய்துதரப்படும். மேலும் விவரங்களுக்கு 7550352916 மற்றும் 7550352917 என்ற செல்லிடப் பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com