இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள 3 விசைப்படகுகளை மீட்க மீனவர்கள் கோரிக்கை

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக கடலில் மூழ்கிய நிலையில் சேதமடைந்து வரும் 3 விசைப் படகுகளை மீட்க மத்திய-மாநில 


இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக கடலில் மூழ்கிய நிலையில் சேதமடைந்து வரும் 3 விசைப் படகுகளை மீட்க மத்திய-மாநில 
அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராமேசுவரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடலுக்குச் சென்ற தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ், சார்லஸ், ஜஸ்டீன் ஆகியோரது 3 விசைப் படகுகளுடன் மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். 
அதன்பின்னர், மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், விசைப் படகுகளை விடுவிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது.
இந்நிலையில், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளை விடுவிக்க வேண்டும் என, மீனவ சங்கத்தினர் தொடர்ந்து மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்பின்னர், மத்திய அரசு கேட்டுக்கொண்டதை அடுத்து, இலங்கை அரசு பல கட்டங்களாக விசைப்படகுகளை விடுவித்து வருகிறது. இருப்பினும், தமிழக மீனவர்களின் 110 விசைப்படகுகள், 3 நாட்டுப் படகுகள் என மொத்தம் 113 படகுகள் இலங்கை காரை நகர் துறைமுகத்தில் சேதமடைந்த நிலையில் உள்ளன. 
இவற்றில், தற்போது பயன்படுத்த முடியும் என்ற நிலையில் இந்த 3 படகுகள் உள்ளிட்ட 12 விசைப்படகுகள் உள்ளன. இந்த 12 படகுகளையும் மீட்க இந்திய அதிகாரிகள் இலங்கை செல்ல உள்ளனர். 
ஆனால், இந்த 3 மீனவர்களின் விசைப்படகுகளை தற்போது எடுத்து வரமுடியாது என, மீன்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள், மத்திய-மாநில அரசுகள் தங்களது விசைப்படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com