தேநீர் கடையில் பணியில் இருந்த 11 வயது சிறுவனை, ராமநாதபுரம் மாவட்டத் தொழிலாளர் நலத் துறையினர் வெள்ளிக்கிழமை மீட்டனர்.
ராமநாதபுரம் கழுகூரணி என்ற பகுதியில் தொழிலாளர் நலத் துறை அதிகாரி சங்கர் தலைமையில், தனிக் குழுவினர் தனியார் நிறுவனங்கள், கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, தேநீர் கடை ஒன்றில் 11 வயது சிறுவன் பணியிலிருந்தது கண்டறியப்பட்டது. சிறுவனை மீட்ட அதிகாரிகள், தேநீர் கடை உரிமையாளரிடமும் விசாரணை நடத்தினர். மீட்கப்பட்ட சிறுவனுக்கு சட்டப்படி அனைத்து சலுகைகள் மற்றும் எதிர்காலத்துக்கான உதவிகள் வழங்கப்படும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.