தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரக் கூட்டம்

தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்ணங்குடி வட்டாரக் கிளைக் கூட்டம் வட்டாரத் தலைவர் நாராயணன்


தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்ணங்குடி வட்டாரக் கிளைக் கூட்டம் வட்டாரத் தலைவர் நாராயணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாநிலத் தலைவர் ஜோசப் சேவியர், மாவட்டத் தலைவர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இக்கூட்டத்தில் தொடக்கப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். அங்கன்வாடிகளுக்கு மாற்றுப்பணி என்ற பெயரில் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களை நியமிப்பதை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக செயலாளர் நாகராஜ் வரவேற்றார். பொருளாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com