ஆர்.எஸ்.மங்கலம் அருகே பைக்கில் இருந்து  தவறி விழுந்து இளைஞர் சாவு

திருவாடானை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.

திருவாடானை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
இளையாங்குடி தாலுகா சீவலாதி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை மகன் விவேகானந்தன் (21). இவரும் இவரது நண்பர் அனந்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகம்  (21) இருவரும் ஆர். எஸ் .மங்கலத்தில் இருந்து திருவாடானை நோக்கி திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில்  உள்ள பள்ளத்தில் தவறி விழுந்ததில் விவேகானந்தன் தலையில் பலத்த காயமடைந்து சிவகங்கை அரசு   மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். உடன் சென்ற மாணிக்கவாசகம் காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com