ராமநாதபுரம் மாவட்டம் நரசிங்கக்கூட்டம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் எழுதிய நூலுக்கு வாசகன் படைப்பிலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது.
சேலம் வாசகன் பதிப்பகம் மற்றும் நம்பிக்கை வாசல் அறக்கட்டளை இணைந்து சிறந்த நூல்களுக்கான போட்டியை அண்மையில் நடத்தின. இதில் தேர்வு செய்யப்பட்ட 15 நூல்களில் கடலாடி வட்டம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் எழுதிய முட்டை பொம்மை என்ற சிறுவர் கதை நூலும் ஒன்றாகும். சனிக்கிழமை சேலத்தில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியர் உள்பட 15 பேருக்கும் விருதுகளை எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் வழங்கினார்.