மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

முதுகுளத்தூர் அருகே பிரிந்து வாழ்ந்த மனைவியை தாக்கிய கணவர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


முதுகுளத்தூர் அருகே பிரிந்து வாழ்ந்த மனைவியை தாக்கிய கணவர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பேரையூரைச் சேர்ந்தவர் கனகலிங்கம்(27). இவரது மனைவி வாசுகி (21). கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். 
இந்நிலையில், வாசுகி முதுகுளத்தூர் காந்தி சிலை பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த வாசுகியை கனகலிங்கம் தகாத வார்த்தையால் பேசி தாக்கினாராம். பலத்த காயமடைந்த வாசுகி முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 
இது குறித்து முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் வாசுகி கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் கனகலிங்கம் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com