திருவாடானை அருகே வழிமுத்தூர் கிராமத்தில் இடப்பிரச்னை சம்பந்தமாக பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழிமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த லெட்சுமணன் மனைவி சொர்ணாம்பிகா (55). இவர் சனிக்கிழமை மாலையில் தனது நிலத்தை சுத்தம் செய்யச் சென்றுள்ளார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் சிலர் வழிமறித்து அவரைத் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சொர்ணாம்பிகா புகார் அளித்தார். அதன்பேரில், வழிமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், இவரது மனைவி நித்யா மற்றும் உறவினர்களான குமார், ராதிகா, ராஜூ, வசந்தா ஆகிய 6 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.