திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முன்புள்ள விநாயகர் மண்டபத்தில் பரதநாட்டிய வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டன.
மானாமதுரை ஸ்ரீ சிவசக்தி நாட்டியாலயா சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த பரதநாட்டிய வகுப்புகளில் மாணவ-மாணவியர் பலர் சேர்ந்துள்ளனர்.
இது குறித்து பரதநாட்டியக் கலைஞர் மற்றும் மத்திய-மாநில அரசு பாராட்டு பதக்கங்கள் பெற்ற ஆசிரியர் சுரேஷ் கூறியது: தற்போது குழந்தைகளுக்கான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில், பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு இன்னும் சில நாள்களில் அரங்கேற்றம் நடைபெறும். ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலக சாதனைக்காக 10 ஆயிரம் பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் அனைவருக்கும் உலக சாதனை சான்றிதழ் வழங்கப்படும் என்றார்.