ராமேசுவரத்தில் மர்மமான முறையில் இறந்த ஆட்டோ ஓட்டுநரின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
ராமேசுவரம் ஈஸ்வரி அம்மன்கோயில் தெருவை சேர்ந்த சம்பத் மகன் முத்துக்குமார் (36). ஆட்டோ ஓட்டுநரான இவர் திங்கள்கிழமை அதிகாலை கெந்தமாதனபர்வதம் செல்லும் வழியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ராமேசுவரம் காவல் உதவி ஆய்வாளர் சுதர்சன் தலைமையில் காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சடலம் அருகே கிடந்த இரு சக்கர வாகனத்தை கைப்பற்றினர். அவர் எப்படி இறந்தார் என காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.