சாயல்குடி அருகே வாலிநோக்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் புதன்கிழமை (ஜூலை 10) மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாலிநோக்கம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாலிநோக்கம், மேலச்செல்வனூர், சாத்தங்குடி, கண்டங்கனி, பாடுவனேந்தல்,கீழச்செல்வனூர், மேலக்கிடாரம், வல்லக்குளம்,சிக்கல், அடஞ்சேரி, சேரந்தை, கிருஷ்ணாபுரம், தனிச்சியம், சொக்கானை, மறவாய்க்குடி, ராஜாக்கள்பாளையம், கோட்டையேந்தல், தத்தங்குடிமத்தியல் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என முதுகுளத்தூர் மின் உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு)மலைச்சாமி தெரிவித்துள்ளார்.